Pages

Thursday, August 19, 2010

உப்பு போட்டு டீ குடித்திருக்கிறீர்களா?

-->
-->
உப்பு போட்டு டீ குடித்திருக்கிறீர்களா?
 

ஆம் என்பவர்கள் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கலாம். அல்லது சுவைகளில் வித்தியாசமான புதுமையை விரும்புபவராக இருக்கலாம். சர்க்கரை கூட போடாமல் சுவைப்பவர்கள் மருத்துவர்கள் அறிவுரைகளுக்கு கட்டுபட்டவர்கள்.
முகர்ந்து பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம் இனிப்பு இல்லாத டீயை. இன்னும் கொஞ்சம் பார்த்தால், பால் கூட இல்லாத கருந்தேநீர் (பிளாக் டீ). சூடு மட்டுமே தேவை இங்கே. வெப்பத்தை உள்ளே கடத்துவதற்குத் தானோ இந்த எதுவுமே இல்லாத கருந்தேநீர். பேக்கிரவுண்ட் மியூசிக் இல்லாத ஹீரோ அறிமுகம் தான்.  

முழு உலகத்தையே உணர்கிறேன் இந்த உப்பு தேநீரில். மலை தந்த தேயிலையும், அலைகடல் தந்த உப்பும் உதட்டை தொடும்போது.

பல்வேறு சுவைகளில் டீ. எலுமிச்சை சாறுடன் தேன் கலந்த தேநீர், இஞ்சி டீ, தேயிலைத் தூளுடன் ஏலக்காய் கலந்தால் ஏலக்காய் டீ, துளசி கலந்தால் துளசி டீ என்று விற்பனை செய்கிறார்கள். புளியங்கொட்டை  கலந்த டீயை புளியன் டீ என்று விற்பதில்லையே?

இன்னும் சுவைகளில் மாற்றம் தேவை என்றால் பசும்பால், ஆட்டுப்பால், எருமைப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பால், காட்டு எருமைப்பால் !!!!!!!!!

பெட்ரோல், டீசலில் ஓடும் ஊர்திகளைப் போல டீயிலேயே ஓடும் மனிதர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மைதான் பெட்ரோலைப் போல  மிகப்பெரிய சந்தை தேயிலைக்கும் இருக்கிறது. சூரியனே பார்க்காமல் கூட இல்லாமல் பல நாள்கள் விடிந்திருக்கின்றன தேநீருடன். பீடி, சிகரெட்டை தடை செய்தால் தீப்பெட்டித் தொழில் பாதிக்கும், தேயிலையை தடை செய்தால் பால் வியாபாரம் பாதிக்கும். ஓரளவு உண்மைதான். 

என்னதான் தேநீரை வடிகட்டினாலும் குடிக்க முடியாமல் அடியில் நிற்கும் துகள்களைப் போல இங்கேயும் படிக்க முடியாமல் அடியில் நிற்கும் எழுத்து துகள்கள் ............................