Pages

Saturday, January 1, 2011

புத்தாண்டு - பூமியின் விழா

ஆண்டுக்கு பனிரெண்டு மாதம் எப்படி? பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம். பூமி தன்னைத் தானே சுற்றும் நேரம் ஒரு நாள். சந்திரன் ஒருமுறை பூமியை சுற்றி வர தேவைப்படும் நேரம் ஒரு மாதம். இந்த இயற்கையின் விதிகளைக் கண்டறிந்து காலண்டரை கண்டுபிடித்த அந்த அறிஞனை எண்ணி வியக்கிறேன். ஆக திசம்பர் 31 தான் ஆண்டின் முடிவு! ஜனவரி 1, புது வருட தொடக்கம்!! இதை கொண்டாடும் உலகமக்கள்!!!

இயேசு பிறந்த தினம் – கிருஸ்துமஸ், கிருஷ்ணர் பிறந்த தினம் – கிருஷ்ண ஜெயந்தி. அது போல பூமியின் பிறந்த தினம்தான் ஆங்கிலப் புத்தாண்டா? அல்லது தமிழ் புத்தாண்டா? அல்லது எந்த புத்தாண்டு தான் பூமியின் பிறந்த தினம்?

நேரம் 00:00:01தான் பூமி தோன்றிய நேரமா? பூமியும் சூரியனும் தோன்றாத போது நேரமே இல்லையா?

மகிழ்ந்த்திருக்கும் சந்தர்ப்பத்தை மக்களுக்குத் தரும் ஒவ்வொரு ஜனவரி 1 யும் நானும் வரவேற்கிறேன். அந்த ஒரு நாளோடு புத்தாண்டு முடிந்து விடுகிறதா? எப்போது ஒரு ஆண்டு பழையதாகிறது?

உலகத்தில் பழையது என்பது தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கும் இயற்கைதான். ஒரு சீரான சுழற்சியில் தான் இருக்கிறது. பூமியை விட மூத்த சூரியன் புதிது புதிதாகத் தானே எரிய முடியும்.

அனைத்து கோள்களுக்கும் ஜனவரி ஒன்று இருக்கிறதா? அக்கோள்களின் புத்தாண்டைக் கொண்டாட யார் இருக்கிறார்கள்?

வாழ்த்துச்செய்தி பரிமாறுதலில் மொபைல் நெட்வொர்க்கே ஒரு சில மணி நேரங்கள் திணறிவிடுகிறது. அந்தந்த time zoneல் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும் போது நெட்வொர்க் தனது அதிகபட்ச திறனை மீறி தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. இந்த சூழ்நீலையில் பாதிக்கப் படுபவர்கள் அவசர சிகிச்சைக்காக/உதவிக்காக தொடர்பு கொள்வோர்.

பூமி எவ்வளவோ பாதிப்புகளுக்குப் பிறகும் தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டதுதான். சமீபத்தில் கூட நாசா, பூமியின் ஓசோன் ஓட்டை அடைந்து வருவதாகத் தெரிவித்து இருந்தது. ஹெய்டி பூகம்பத்தில் பூமி சிறிது சாய்ந்து நாளின் நேரம் குறைந்துள்ளது.

புத்தாண்டு என்பது யாருடைய விழா? பூமியின் விழா.
யார் விளம்பரப் படுத்தி யார் வியாபாரம் செய்கிறார்கள்?
   
பூமியின் விழாவில் பூமியை பாதுகாக்கும், செம்மைப்படுத்தும், மாசுகளைக் குறைக்கும் செயல்களைத் தானே செய்ய வேண்டும். அதை விடுத்து அனைத்து நாட்டினரும் ஒரே நேரத்தில் தாக்கினால், பாவம் இந்த பூமி.

பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானதா? மற்ற உயிரினங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லையா?

பூமியை நம்பிதான் மனிதர்கள் இருக்கிறோம். மனிதனை நம்பி பூமி இயங்குவதில்லை.

புத்தாண்டை பூமியின் விழாவாக அமைதியுடன் கொண்டாடுவோம். வாழ்த்துக்கள்.