Pages

Tuesday, May 28, 2013

கரை சேர்க்குமா கட்டாய படிப்பு..... முதல் பாகம்

பள்ளிக்கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? அடிப்படையில் மேற்படிப்பு என்பதே அடுத்து தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி பெறுவதற்கும்தான். அதாவது குறிப்பிட்ட துறையில் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கான பணத்தை சம்பாதிப்பதற்காகத்தான். மாணவர்கள் தன் சுயவிருப்பத்துடன் ஒரு துறையை படிக்கத் தேர்ந்தெடுத்து அப்படிப்பின் தொடர்புடைய துறையில் பணியாற்றும்போது முழு ஈடுபாடு இருக்கும். பணம் சம்பாதிப்பதும் அதனுடன் சேர்ந்து நடக்கும். இதே பிடிக்காத துறையில் படித்து பணியாற்றுபவனு(ளு)க்கு பணம் சம்பாதிப்பது ஒன்றே முக்கிய நோக்கம். பணி இரண்டாம்பட்சம் தான். (கட்டாயத்தின் பேரில் படித்த மாணவர் படிப்பிலும் நாட்டமின்றி தெளிவான புரிதலுமின்றி படித்து முடித்து வேலை கிடைப்பதும் கடினம்).


இங்கே தொழில் ஈடுபாடில்லாததால் பணம் சம்பாதிப்பது ஒன்றே அத்தியாவசியமாகிறது. ஆகவே விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களால் தரமான பொருளோ, சேவையோ தரமுடியாது. இதுபோன்று விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை எந்த நாட்டில் அதிகமாகிறதோ அந்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் தரம் எப்படியிருக்கும்? பொருளாதாரம் பாதிக்காதா?

பணம் சம்பாதிக்கும் நோக்கம் முதன்மையாகும் போது தொழில் அறங்கள் (Professional ethics) ஒழிக்கப்படும். தொழிலில் புரிதல் குறைவாக உள்ளதால் உற்பத்தியை எட்ட குறுக்கு வழிகள் கையிலெடுக்கப்படும். உற்பத்தி செய்யப்படும் தரக்குறைவான பொருட்களுக்கான அரசாங்க தரக்கட்டுப்பாட்டுத் துறைகளை சரிக்கட்ட லஞ்சம் ஊழல் கையூட்டுகளால் ஈடுகட்டப்படும். இதுபோன்ற சீரழிவுக்கு பலவேறு காரணங்கள் இருந்தாலும் இக்காரணம் முதன்மையானதும் மறைமுகமானதாகவும் கருதுகிறேன். இந்த தரக்குறைவான பொருட்கள் யார் தலையில் விடிகிறது? அப்பாவி பொதுமக்கள் தலையில்.

This 2 parts of articles published in dinamalar newspaper as one dated 2.6.2013

உங்களுக்கு விருப்பமில்லாத செயலை உங்களால் எவ்வளவு நேரம் செய்ய முடியும்? அச்செயலை நேர்த்தியாக செய்ய முடியுமா? இங்கே நான் குறிப்பிட விரும்புவது, விருப்பமில்லாத துறையில் படித்து விருப்பமில்லாத துறையில் வேலை செய்து வாழ்வது என்பது புதைமணலில் சிக்குவது போன்றது. அதன்பின் மீண்டு வருவது மிகக்கடினம். இது அந்த தனிமனிதனோடு  மட்டும் முடிந்து போவது இல்லை.  சமுதாயத்தையும் பாதிக்கும். மன உளைச்சலில் ஆரம்பித்து குடும்ப உறவுகளில் சமூக உறவுகளில் சிக்கல் என்று நீண்டு கொண்டே போகும். மீனைக் கொண்டுவந்து ஓட்டப்பந்தயத்தில்  ஜெயிக்கச் சொன்னால் எப்படி?விருப்பம் என்பது இயல்பிலிருந்து வருகிறது. இயல்பிலிருந்து  மாறும்போது சமூகம் பாதிக்கப்படுகிறது.

ஒரு சின்ன உதாரணம். ஆட்டோ டிரைவர் தன் தொழிலை விரும்பி ஏற்றுக்கொண்டிருந்தால் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு எவ்வளவு நன்மை. பணம் சம்பாதிப்பது ஒன்றே நோக்கமாகக் கொண்டிருந்தால் எவ்வளவு சங்கடங்கள். இதே போல பணம் சம்பாதிப்பதே முக்கிய நோக்கமாக கொண்ட அரசு ஊழியர்கள்/அதிகாரிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகளால் எவ்வளவு சிக்கல்கள் இந்த சமுதாயத்திற்கு.

விருப்பப்பட்ட துறையில்/தொழிலில் ஈடுபட்டவர்களால் எத்தனை நல்ல பங்களிப்புகள் என வரலாறு முழுவதும் எண்ணிப்பார்க்கலாம். விருப்பமில்லாமல் ஒரு துறையில் ஈடுபட்டவர்களால் வரலாற்றில் இடம்பெறுவது அரிது அதுவும்  விபத்துகளாகவே இருக்கும். இதற்கான தீர்வுகள் என்ன என்பதை இப்பதிவின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்களேன்....
கல்லூரியில் சேருவதற்கு முன் - ஒரு சிந்தனை

கரை சேர்க்குமா கட்டாய படிப்பு ..... இரண்டாம் பாகம்

விருப்பமில்லாத துறையை தன் வாழ்நாளை சுமூகமாக ஓட்ட பொருளாதாரத்தை தேட தேர்ந்தெடுப்பதால் பல பாதகமான விளைவுகள் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் ஏற்படுகிறது என்பதை இப்பதிவின் முதல் பாகத்தில் பார்த்தோம். இப்போது இந்த நிலை ஏன் ஏற்பட்டது, இதற்கான தீர்வுகள் என்ன என்றும் பார்ப்போம்.

பணம் உள்ளவர்கள் வசதியாகப் பிரச்சினை இன்றி வாழ்வதாகத் தெரிவதால் அதுவே நோக்கமாக பலருக்கு இருக்கிறது. அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாத போது பலர் எந்த வழியில் பணம் நிறைய கிடைக்குமோ அதைத் தேர்ந்தெடுக்கின்றனர். 25-30 வயது ஆனபின்னர் தான் தாம் செய்த தவறு தெரிகிறது. அதன் பின்னர் திருமணம், குழந்தை என்றானபின், தனி நபர் விருப்பம் என்பது இரண்டாம் இடத்திற்குச் சென்று விடுகிறது. இது போன்று விருப்பமில்லாத துறையை தேர்ந்தெடுப்பது எதனால் நேர்கிறது என்றால் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான பரந்துபட்ட பல்வேறு துறைகள் வேலைகள் தொழில்கள் இருப்பது இளவயதினருக்கு தெரியாமல் இருப்பதுதான். பெற்றோர்களும்  ஆசிரியர்களும் அதற்கும் மேலாக கல்விக்கொள்கையும் பள்ளி மாணவர்களுக்கு பலவகைப்பட்ட வேலைவாய்ப்பு துறைகளையும் தொழில்களையும் அறிமுகப்படுத்துவதை முக்கியமான பொருளாக கருதாததும் இந்த நிலைக்கு காரணமாகும். நம் கல்வித்திட்டம் அனைத்து மாணவர்களையும் ஒரு சில வேலைகளுக்காகவே தயார் செய்கிறது. பல துறைகளைப் பற்றி அறிமுகப்படுத்ததால் ஒரு ஒவ்வொரு மாணவனுக்கும் பொருளாதாரத்தை ஈட்ட குறுகிய பாதையே உள்ளது. அதிலும் சாதி ஏற்றத் தாழ்வுகளைப் போல உயர்ந்த வேலை/படிப்பு தரக்குறைவான வேலை/படிப்பு என்ற சமூக மதிப்பீடுகளும் உள்ளன. ஊடகங்களால் ஏற்படுத்தப்படும் ஒரு வித பிம்பம் ஒரு சில வேலைகளையே உயர்ந்தவையாக முன்னிறுத்துகிறது. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் இந்தக் காரணத்தால் தான் என்ஜினியர், டாக்டர், கலெக்டர் மட்டும் தான் ஆகிறார்கள். வேறு எதுவும் ஆவதில்லை. என்ஜினியரிங்கில் 40க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. அதுகூட எந்த குறிப்பிட்ட துறையில் என்ஜினியர் ஆவது என்பது அவர்களுக்கே தெரியவில்லை. இது இல்லனா அது என்ற மனநிலையில் தான் உள்ளனர் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் பெற்றவர்கள்.  

குழந்தைகள் பள்ளிக்கல்வி நிறைவடையும் முன்பே இவ்வுலகத்தின்/ நாட்டின்/ பிராந்தியத்தின் பொருளாதாரம் எப்படி நடக்கிறது. எந்தெந்த தொழில்கள் அரசாங்கத்தால், தனியார் நிறுவனங்களால், தனி நபர்களால் நடைபெறுகிறது என்றும் எந்தெந்த தொழில்கள் அவர் சார்ந்த ஊரின்/ மாவட்டத்தின்/ மாநிலத்தின் பொருளாதார நிலைகளின் ஆதாரமாக உள்ளது என்பதையும் பள்ளி மாணவர்களுக்கு விவாதங்களின் மூலமாக கற்றுத் தரவேண்டும். உதாரணமாக விவசாயத் துறையின் பொருளாதாரம் நேரடி வேலைவாய்ப்புகள் மறைமுக வேலை வாய்ப்புகள் குறித்து விவாதிக்கலாம். இதே போல ஒவ்வொரு (சுகாதாரம், ரயில்வே, செய்தித் துறை, ஏற்றுமதி இறக்குமதி, பாதுகாப்பு, கல்வி, வரிவிதிப்பு, நுகர்பொருள், சேவைகள் ....) துறைகளைப்  பற்றி விவாதிக்கலாம். ஒரு தொழில் பாதிக்கப்படும்போது ஏற்படும் தாக்கங்கள் பற்றியும்  அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் விவாதிக்கலாம். இந்த விவாதத்திற்கு வாரம் ஒரு வகுப்பை ஒதுக்கலாம். விளையாட்டு வகுப்பை கால அட்டவணையில் மட்டுமே பார்க்க முடிகின்ற நிலைமை விவாத வகுப்பிற்கு வந்து விடாமல் செயல்படுத்த வேண்டும்.

நம் பாரம்பரிய கல்வியில் இது போன்று பல்வேறு தொழில் துறைகள் குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிவிக்கப்படும் பழக்கங்கள் இல்லை. நம் நாட்டில் புகுத்தப்பட்ட பிரிட்டிஷ் கல்வியிலும் பல்வேறு துறை தொழில்கள், வேலைவாய்ப்புகள் மாணவர்கள் கல்விமுறை வாயிலாக தெரிந்துகொள்ள அனுமதிக்கவில்லை. அமெரிக்க, ஐரோப்பிய  பள்ளிகளில் இரண்டு விதமான நடவடிக்கைகள் உண்டு. (1) career day (2) take your child to work-day. இவ்விரண்டும் பள்ளிகளில் நடக்கும். career day- அன்று பெற்றோர், தந்தையோ தாயோ தன்னுடைய மகனின் வகுப்பிற்கு வந்து தான் செய்யும் பணி  குறித்துக் கூறுவார். ஆசிரியர்கள், தீ அணைப்புத் துறையினர், விஞ்ஞானி, பொறியாளர் எனப் பலர் வந்து தாம் செய்யும் பணி குறித்து விளக்குவர். சில சமயம் பள்ளியே சிலரை அழைத்து வருவதுண்டு. இரண்டாவது நடவடிக்கையின் போது மாணவன் தனது தந்தை/தாய் செய்யும் பணி இடத்திற்கு தன் பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்டு  அங்கு கவனித்த வேலைகளைக் குறித்து அடுத்த நாள் ஒரு கட்டுரை எழுதி வகுப்பில் படித்துக் காட்ட  வேண்டும். 

இந்த இரண்டு முறைகளையும், விவாத வகுப்புகளையும் பள்ளிகளில் கடைப்பிடிக்க அரசாங்கம் ஆவன செய்யலாம்.

இதெல்லாம் எதற்குக் கூறுகிறேன் என்றால் – அங்கு  உள்ளவர்களுக்கு பலப் பல துறைகளைக் குறித்து மிகச் சிறிய வயதிலேயே தெரிவிக்கப் படுகிறது. அதிலிருந்து அவர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நமது ஊரில் சிறுவயதினருக்கு, நம்மால் முடிந்தவரை பல வேறு துறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.


இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்களேன்....

Saturday, May 25, 2013

Krikhokor hondhanot (In Search of farmer... in Assamese)

My heartfelt thanks to Ms. Babita Mahanta for Assamese translation

Tamil language link: எங்கே விவசாயி? (source)

 

 
don't hesitate to give your comments, suggestions, opinions, corrections.......

for typing in  বাংলা  ગુજરાતી  हिंदी  ಕನ್ನಡ  മലയാളം मराठी  नेपाली ଓଡ଼ିOriya,  ਪੰਜਾਬੀ ,   தமிழ் తెలుగు and  اردو  . follow the link & download a small app to your computer, this works in offline very well. 
http://www.google.com/ime/transliteration/

Thursday, May 23, 2013

"நான்" அவன் இல்லை. நான் யார்?


இந்த உலகில் மிக சிலரே “நான்” என்ற அனுபவத்தை அடைந்ததாக உணருகிறேன், என்னை பொறுத்தவரை “நான்” என்பவன் அவன் நினைப்பதை செய்பவன், யாரையும் எதிர்நோக்காதவன், யாருக்கும் கடமைப்படாதவன், யாரையும் நேசிப்பவன் இங்க திருத்தும் செய்கிறேன் யாவற்றையும் நேசிப்பவன். அவனுடைய உறைவிடம் இந்த உலகம்... அவனுக்கு உள்ள சொந்தம் இந்த பூமி தாய்... அவன் அவளை நேசிக்கிறான். அவளை புரிந்துகொள்ள நினைக்கிறான். ஆனால் அகங்காரம் கொண்ட உலகானது அந்த அனுபவத்தை அவனுக்கு தர மறுக்கிறது, அதன் பக்கத்திலும் நியாயங்கள் இருக்கதான் செய்கிறது என்ன செய்ய ?

“நான்”, அவன் கடவுளுக்கு கீழே உள்ளவன் அவனுடைய வேலை அவன் தாயை புரிந்துகொள்வது. “நான்” வாழ்நாள் முழுவதும் அலைவான், நிரந்தரத்தை வெறுப்பவன், முடிவிலியை தெரிந்துகொள்ள ஆசைப்படுபவன் அவனுடைய ஆசைகள் எபோதும் நிறைவேறபோவதில்லை என அறிந்தும் அதை அடைய முற்படுபவன். “நான்” ஒரு தனி மனிதன், தனித்த மனிதன் ,தனிமையின் அழகை உணர்ந்த மனிதன். அதன் கிறக்கத்திலிருந்து மீண்டு வர மனமில்லாதவன்.. அவன் நடக்கிறான். சில நேரங்களில் பறக்கிறான்.. புரியவில்லை பரிணாமத்தில் அதற்கு வழியில்லையே என்றாலும் “நான்’ பறக்கிறான்.

நான் அவனை பார்க்க விரும்புகிறேன். “நான்” என்னை விட ரொம்ப வருடங்கள் முன்னோக்கி இருக்கிறான். ஒரு பத்து பதினைந்து வருடங்களாவது அவன் முன் நின்று நடக்கிறான்.

நான் “நான்” – ஐ பார்க்க வேண்டும். அவனுடன் பேசி சில விஷயங்களை பகிர வேண்டும்... இல்லை இல்லை உண்மையில் நான் “நானிடம்” கதை கேட்கவே அவனை பார்க்க விரும்புகிறேன்; எனக்கு தெரியும் “நானிடம்” ஏகப்பட்ட கதைகள் இருக்கும் அதைவிட அந்த கதைகளை யாரிடமும் சொல்லமாட்டன் என்பதும் தெரியும். நான் அவனை பார்க்க வேண்டும் அவன் இருபது வருடங்கள் தள்ளி இருக்கிறான் என்று நினைக்கிறேன் அதற்கு பிறகு கூட இருக்கலாம் அவனை கண்டுபிடிப்பேன் என்று கூட எனக்கு நம்பிக்கை இல்லை. அவன் அப்போது எப்படி இருப்பான் என்ற கற்பனைக்கு கூட வழியில்லாமல் அவனை இங்கு எழுதுகிறேன். அவன் இந்த காலத்தில் என்ன செய்வான் ? தூங்கிக்கொண்டிக்கலாம்............ இல்லை இல்லை “நான்” இன்னும் பிறக்கவில்லை சொல்லப்போனால் பிறக்கப்போவதும் இல்லை என அறிகிறேன். ஆசா பாசங்கள் அவனை கருத்தரிக்க விடாது... அவனை இந்த உலகிற்கு அறிமுக ப......(இதை எழுதி முடிக்கவில்லை .... “நான்” என்னை எச்சரிக்கிறான் அவனைப் பற்றி சொல்ல கூடாது என்று ..!!!!)

நான் அவனை மதிக்கிறேன் அதனால் நிறுத்திவிடுகிறேன்.
பி.கு: நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன் – என்னை நீங்கள் பூட்டி வைத்துள்ளிர்கள் – உடைக்க முடியாத பூட்டு உணர்வுகளால் திரித்த பூட்டு உயிரை நெறிக்கும் பூட்டு – கடைசி வரை நான் நானாக போவதில்லை, நீங்களும் விட போவதில்லை – போகட்டும் நான் “நீங்களாகவே” இருக்கிறேன்.

- திரு. கா. கா.