Pages

Thursday, July 12, 2012

புது மழை

மழை வருது மழை வருது
நெல்லு வாருங்கோ
முக்கா படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்கோ
ஏரோட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்கோ
சும்மா திரியுற மாமனுக்கு
சூடு வையுங்கோ

என்று பாடிக்கொண்டு தெருவெங்கும் முழுதாக நனையும் வரை அனைவர் வீட்டு நெல்லையும் வாரி முறுக்கு சுட சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து பூசை வாங்குவதற்குக் காரணம் இந்த மழை தான். இது யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் தான் அனைவர் வாயிலும் காதிலும். ஓட்டு விளிம்புகளில் சொட்டும் நீரை கைகளில் சேகரிப்பது திண்ணையில் இருந்துகொண்டு. இதெல்லாம் ஒரு விளையாட்டு. ஒரு வேடிக்கை. மழை நாளின் வாடிக்கை. மழைக்கு ஒதுங்கும் திண்ணைகளில் ஈரமும், குளிரும், அவ்வப்போது அடிக்கும் காற்றும் அங்கே உருவாகும் கதைகளும் அப்பப்பா இப்போது நினைத்தாலும் ஈரமாக இருக்கிறது. அந்தக் கால மழை.
Inline image 2
 மழை வரும்போது அண்ணாந்து பார்த்திருக்கிறீர்களா? துளித் துளியாகத் தோன்றாமல் கற்றை போன்று மிக வேகமாக வரும். ஒரு கற்றை மேல் மட்டும் கவனம் கொள்ளாமல் எத்தனை கற்றைகளைப் பார்க்க முடியுமோ அத்தனையையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, "டேய்! மழையில நனையாத... வீட்டுக்கு உள்ள வா..." அம்மாவின்  பாச மழை.
Inline image 1
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை", இது ஒளவையாரின் மூதுரை. இயற்கை அன்னைக்குத் தான் எத்தனை பிள்ளைகள். தாய் என்றால் குழந்தைக்குப் பால் தரவேண்டும் அல்லவா? மழை தாய்ப்பாலுக்கு நிகர்.  நல்லாருக்கு மட்டுமல்ல அனைவருக்காகவும் பெய்யும் மழை. தாய்ப்பால் மட்டுமல்ல இரத்தம், விந்து, உமிழ்நீர், வியர்வை அனைத்தும் மழையின் வேறு வடிவங்கள். மழை கெட்டால், இவை அனைத்தும் கெடும்.

மழைத்துளிகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும்? இவ்வுலகில் உள்ள பேக்டீரியா, வைரஸ் முதல் யானை, திமிங்கிலம் உள்ளடக்கிய அனைத்து உயிர்களின் எண்ணிக்கையின் மடங்கில் இருக்குமோ!

இயற்கை எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. நாம் நீர் நிலைகளில் என்னென்னவோ அசுத்தம் செய்தாலும், ஆவியாகி நீரை மட்டும் எடுத்து மீண்டும் குளிர்ந்து தூய்மையான நீரை மட்டும் அமிர்தமாக (elixir of life) அளிக்கிறது. ஏதோ ஒரு சில தவிர்க்க முடியாத சூழ்நிலைக் கூட்டுகளால், அமில மழை பெய்தது. அவையெல்லாம் தாயின் மிரட்டலைப் போல. தாயைப் பழித்தாலும் தண்ணியைப் பழிக்காதே. காசை தண்ணீர் மாதிரி செலவு செய்யாதே என்று சொல்ல்வார்கள். காசை எப்படி வேண்டுமானால் செலவு செய்யலாம். காசு இன்னிக்கி போவும், நாளைக்கு வரும். ஆனால் தண்ணீர் அப்படியல்ல. சிக்கனம் தேவை. மாசு படுத்தக் கூடாது.

நல்லார் ஒருவர் இருந்தால் அவருக்காகப் பெய்யும் மழை என்று பேசிக்கொண்டிருந்தோம். நல்லார் இல்லாமல் கூட பெய்யும் மழை. ஆனால் சூடோமொனாஸ் சிரிங்கே (Pseudomonas Syringae) என்ற நுண்ணுயிர் பேக்டீரியா  இல்லாமல் பெய்யாது மழை. சமீபத்திய கண்டுபிடிப்பு. இந்த நல்லவரை ஆலங்கட்டிகளின் நடுவிலிருந்து கண்டெடுத்திருக்கிரார்கள். காற்றுடன் மேகம் வரை சென்று, நீராவியை மிக வேகமாக ஒன்று கூட்டி உறைய வைக்கும் (நீர் உறையும் வெப்ப நிலையை விட அதிகமான வெப்ப நிலையிலேயே). இதே போல இந்த சிரிங்கே, தாவரங்களின் பகுதிகளை உறைய வைத்து தாவர செல்களைக் கொல்லும் நல்லவர். முன்பு எழுதிய மழை பதிவில், இமயமலை பள்ளத்தாக்கில் நடந்த மனிதக்கூட்டத்தின் மர்ம சாவுக்கும் இந்த நல்லவர் தான் காரணம்.

மண்ணிலும் இருந்து, விண்ணுக்கும் சென்று, மீண்டும் மண்ணை நோக்கி வரும் மழையுடன் பயணிக்கும் சூடோமொனாஸ் சிரிங்கேவாக மாற ஆசை.

Monday, July 9, 2012

உறைந்த இரத்தம்............ பிரிந்த உயிர்..............

சமீபத்தில் என் மனதை மிகவும் வருத்தமடையச் செய்த சம்பவம், என் நண்பரின் அகால மரணம். அதன் காரணம் இரத்த உறைவு (blood clot). இரத்த உறைவு மரணத்திற்குக் காரணமாகுமா? இதுவரை எனக்கும் தெரியாது. மருத்துவர்கள் இரத்த உறைவின் விளைவுகளை எடுத்துரைக்காதது மரணத்திற்கு இட்டுச்சென்றது.

நண்பர்களே, நம் உடல்தான் நம் பிரதான சொத்து. "போகும் போது என்ன கொண்டு போகப்போகிறோம்" என்று சொல்லுவார்கள். ஆனால் போகும்வரை நமது உடல்தான் நம்முடன் இருக்கும்.உங்கள் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். என்னதான் கையெழுத்து மட்டுமே போடும் வேலையாயிருந்தாலும் உங்கள் கை அவசியம், கண் பார்வை முக்கியம். வெளியுருப்புகளை விட உள்ளுறுப்புகள் மிக மிக பாதுகாக்க வேண்டியவை. ஆசைகள் அதிகமிருக்கும் அதற்கெல்லாம் ஈடுகொடுக்க உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டும்.

நண்பர் Dr. ராஜாராம் பாட்டீல் (32), வேளாண் வேதிப்பொருட்களில் முனைவர். இயற்கை விவசாய சான்றளிக்கும் நிறுவனத்தில் கள ஆய்வாளர். கள ஆய்வுகளுக்குச் செல்ல அடிக்கடி பயணிப்பது வழக்கம். அவுரங்கபாத்தில் என் உடன் பணிபுரிந்தார். நாங்கள் இருவரும் ஒரே அறை நண்பர்கள். பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றிருக்கிறோம். நல்ல சிந்தனையாளர், ஆரோக்கியமானவர், நோய் எதுவும் இல்லை. கடந்த மே மாதத்தில் ஒரு நாள், பேருந்தின் உள்ளேயே தடுமாறி விழுந்ததில் கால முட்டி எலும்பில் சிறு முறிவு (minor fracture), உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி scan செய்ததில், இரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறதென்றும் உறந்த இரத்தத்தை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டு அதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது.
 
ஆரோக்கியமான மனிதருக்கு இரத்தம் உறைதல் மிக மிக  தேவையான ஒன்று. ஏதேனும், சிராய்ப்போ அல்லது வெட்டுப்பட்டலோ, வெட்டுப்பட்ட இடத்தில் இரத்தம் அதிகம் வெளியேறாமல் தடுக்கும், உடலின் ஒரு தற்காப்புச் செயல்பாடு. உடலுக்கு வெளியே இரத்தம் உறையும் செயல்பாடு எவ்வளவு மகத்தானதோ அதே அளவு ஆபத்தானது உடலுக்கு உள்ளே நடக்கும் இரத்த உறைவு. உள்காயங்களில் உடலின் உள்ளே இரத்த உறைவு நடக்கும் அபாயம் அதிகம். வீக்கம், தோலின் நிறம் மாறுதல் போன்ற வெளிக்குறிப்புகளும் பல நேரங்களில் இருக்காது. ஆனால் வலி இருக்கும். உறைந்த இரத்தம் அதே இடத்தில் இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், உறைந்த இரத்தம் ஓடும் இரத்ததில் கலந்து ஓட ஆரம்பித்து இதயத்துக்கோ, நுரைஈரலுக்கோ சென்றால்...........இரத்தக் குழாயில், மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி திடீர் மாரடைப்பிற்குக் காரணமாகும். உயிரிழப்பை ஏற்படுத்தும்.

நண்பர் அறுவை சிகிச்சைக்கு முன்பு ஓய்வுக்கால்த்தில் காலை மடக்கக்கூடாது, நடக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு ஓய்விலிருந்தார்.  ஆனால் சிறு இரத்த உறைவு மரணம் வரை கொண்டு செல்லும் என்று தெரியாது. வலி குறைய ஆரம்பித்து அறுவை சிகிச்சைக்கு இரண்டு நாள் இருந்தது. வீட்டின் உள்ளே மட்டுமே நடந்தார். ஞாயிறு அன்று மாலை நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது, உடனடியாக கிராமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது ஒரு  மருத்துவமனையில் மருத்துவர் இல்லை. இன்னொரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் அடுத்தடுத்த மாரடைப்பு (multiple attack) ஏற்பட்டது. மருத்துவர் பரிசோதித்து நண்பர் இறந்து விட்டதாக அறிவித்தார். மூன்று நிமிடத்திற்கு முன் வந்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றார். உடலின் உள்ளே இரத்தம் உறைந்து மரணத்தை ஏற்படுத்தும் இந்த நிலைக்கு deep vein thrombosis, pulmonary embolism என்றும் சொன்னார்கள். எந்தப் பெயராக இருந்தால் என்ன? இது மீட்க முடியாத இழப்பல்லவா?

மிகச்சிறிய இந்த இரத்த உறைவு உயிரையே எடுக்கும் என்ற அறியாமையும், புரியவைக்காத மருத்துவர்களையும் எண்ணி வருந்துகிறேன். இதுபோன்று நம் நெருங்கியவர்களுக்கு ஏற்படாமல் அறிவுரை கூறி தகுந்த நேரத்தில் சிகிச்சை மேற்கொண்டால், 100 சதவீதம் மரணம் ஏற்படாமல் தடுத்துவிடலாம். சிகிச்சை முறைகளும் எளிதானதுதான். தடுக்க முடிந்த உயிரிழப்பு இன்னுமொரு முறையும் நிகழக்கூடாது.
நண்பரின் ஆத்மா அமைதியடையட்டும்.


Friday, June 29, 2012

Credit card மற்றும் debit card ஐ பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? அல்லது bank account இல் இருந்து எவ்வாறு பணம் திருடப்படுகிறது?

உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வங்கிகளில் சேமிக்கிறோம், கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் எனப்படும் பிளாஸ்டிக் பணத்தை ATM களிலும், கடைகளிலும், online shopping எனப்படும் இண்டெர்நெட் கடைகளிலும், பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் பல்வேறு இடங்களிலும் பயன்படுத்துகிறோம்.

கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் பயன்பாடு பெருகிக் கொண்டே வருகிறது. RBI யின் கணக்குப்படி 2007ல் 41,361 கோடி ரூபாய், 2008ல் 57,958 கோடி ரூபாய் கிரெடிட் கார்ட் மூலம் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது. ஒரு வருடத்தில் 41% பயன்பாடு உயர்ந்திருக்கிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை குறி வைத்து நடக்கும் குற்றங்களும்தான்.
 Inline image 1
இத்தகைய திருடர்களின் நோக்கம் பிறர் கணக்கிலிருக்கும் பணத்தை கார்டுகளின் மூலம் திருடுவது, வங்கிக் கணக்கிலிருந்து online ல் கொள்ளை அடிப்பது. சமகாலத் தமிழில் சொன்னால் 'அடுத்தவன் அக்கவுண்டில் ஆட்டைய போடுறது'.

ம்ம்…. எப்படி நடக்குது?
பொதுவாக தனிப்பட்ட நபரின் வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள் கசிவதால் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது. எத்தனையோ வழிகளில் உங்கள் தகவல்களை 'சுட' திருடர்கள் காத்திருக்கிறார்கள்.

கார்டுகளில் ஒரு பக்கம் உங்கள் (கணக்கு வைத்திருப்பவர்) பெயர், வங்கியின் பெயர், முக்கியமான 16 இலக்க கார்டு எண் போன்றவை பொறிக்கப் பெற்றிருக்கும். மற்றொரு பக்கம் கருப்பு நிற மின் காந்த பட்டையில் மின்னணு கருவியால் படிக்கக்கூடிய தகவல்கள் அடங்கியிருக்கும். மேலும், CVV எனப்படும் Card Verification Value, கார்டின் பயன்பாடு முடிவடையும் தேதி இவையெல்லாம் பொரிக்கப் பெற்றிருக்கும். இத்தகைய தகவல்கள் கசிவதால் தான் குற்றங்கள் நடக்கின்றன.

சரி….. இதுல எத்தனை வகைதான் இருக்குது?
இந்த மாதிரி குற்றங்கள் இரண்டு வகை, முதல் வகை offline திருட்டு. அடுத்தது online திருட்டு.

Ok. அதப்பத்தி தெளிவா  சொல்லுங்க.
உங்கள் கார்டு (atm/debit/credit) திருடப்பட்டு, உங்களைப் பற்றிய, உங்கள் அக்கவுண்ட் பற்றிய விவரங்களுடன் நடைபெறுவது offline குற்றம் அல்லது திருட்டு. உங்கள் பர்சை பிக்பாக்கெட் அடித்தோ, உங்கள் emailல் நுழைந்தோ, உங்கள் வீடு மற்றும் அலுவலக குப்பையிலிருந்தோ அல்லது வேறு எந்த வழியிலோ திருடர்கள் உங்கள் விவரங்களை பெறுவார்கள். இப்படி நடக்கிறது offline குற்றம்.
அதாவது உங்கள் கார்டும், அது சம்பந்தப்பட்ட தகவல்களும் இல்லாமல் offline திருட்டு நடக்காது.
இது பரவயில்லை, அடுத்து பயங்கர கொள்ளையை online குற்றத்தில் பாருங்கள்.

ஸ்… ஸபா…….     இப்பவே.. கண்ண கட்டுதே…….

Online குற்றம் தான் திருடனுக்கு சுலபமான வழி, ஜாலியாக internetல் இருந்தே உங்கள் பணத்தை எந்த நேரத்திலும் கொள்ளை அடிக்கலாம்.

onlineல் திருட்டு 3 முறைகளில் நடக்கிறது

1.      Phishing: திருடர்களால் உங்கள் வங்கி மற்றும் கார்டு தகவல்களுக்காக 'தூண்டில்' போடப்படுவது. முதலில் திருடன் உங்கள் email முகவரியைப் பெறுவான். பிறகு உங்களுக்கு  உங்கள் வங்கியிலிருந்து வருவதைப் போல ஒரு mail வரும், நம்பத்தகுந்தவை போலவே இருக்கும் (இந்த mail வேறு (எந்த) மாதிரியாகவும் இருக்கலாம்). அந்த mailல் link ஒன்று தரப்பட்டிருக்கும். இதுதான் தூண்டில். அதில் நீங்கள் click செய்தால், உங்களை ஒரு log-in பக்கத்திற்கு கொண்டு செல்லும். உங்கள் வங்கியின் தளத்தைப் போலவே வடிவமைக்கப் பட்டிருக்கும். அதில் உங்கள் log-in name மற்றும் கடவுச்சொல் (password) கொடுத்து விட்டால் உங்கள் அக்கௌன்ட்  (ஊ.… ஊ….) தடுமாறிவிடு(ழு)ம், balance இருக்காது.


2.      Skimming: திருடர்கள் உங்கள் கார்டைப் போலவே ஒரு கார்டை தயாரிப்பார்கள். ஒரு cd யிலிருந்து மற்றொரு cd யில் தகவல்களை பதிவது போல். இதற்காகவே skimmer என்ற கருவி உள்ளது. உங்கள் கார்டை அதில் swipe செய்தால் (தேய்த்தால்) போதும். மற்றொரு வெற்று (blank) கார்டில் பிரதி எடுத்து உங்கள் அக்கௌன்டில் பணத்தை காலி செய்வார்கள். உங்கள் கார்டு க்ரெடிட் கார்டாக இருந்துவிட்டால் அதன் credit limit வரை காலி செய்து விடுவார்கள். பிறகு திருடனின் கடனை நீங்கள் தான் அடைக்க வேண்டும்.
பொருட்கள் வாங்கிவிட்டு நீங்கள் கார்டு மூலமாக பணம் செலுத்தும்போது உங்கள் பார்வையிலிருந்து மறைத்து skimmerல் தேய்ப்பார்கள். Skimming ஹோட்ட்ல்களிலும் பெட்ரோல் பங்க்களிலும் நடைபெறலாம்.
Inline image 2 
3.      Application குற்றம்: திருடன் ஒரு வங்கிக் கணக்கை உங்கள் பெயரில் ஆரம்பிப்பான். அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் (ரசீதுகள், வங்கி கணக்குகள் மற்றும் பல ) திருடி கிரெடிட் கார்டு பெற்று செலவு செய்தால் நீங்கள்தான் வங்கிக்கு திருப்பிச் செலுத்தவேண்டும்.
உக்காந்து யோசிப்பாங்களோ…..
 இதுல இருந்து எப்படி escape ஆகிறது?
 Alert ஆ இருக்கணும்.
  • நீங்கள் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் ஆவணங்களை நகல்களாக கொடுக்கவும். மேலும் அந்த நகல்களில் உங்கள் கையொப்பம், தேதி, எதற்காக அளித்தது என்றும் எழுதி விண்ணப்பிக்கலாம்.
  • உங்கள் வங்கி மற்றும் கிரெடிட் கார்டு கணக்குகளை வாரத்திற்கு ஒரு முறையேனும் பணப்பரிமாற்ற ரசீதுகளுடன் சரிபார்த்துக்கொள்ளுங்கள். Internet banking வசதி இருந்தால் பணப்பரிமாற்ற்ங்களை பார்த்துக்கொள்வது எளிது.
  • சந்தேகிக்கும் படி ஏதேனும் உங்கள் கணக்கில் நடந்திருந்தால் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளுங்கள். தவறான பரிமாற்றம் இருந்தால் புகார் அளிக்க தாமதம் வேண்டாம். இது பாதிப்புகளை குறைக்கவும், தவறை கண்டுபிடிக்கவும் உதவும்.
  • அனைத்து பழைய வங்கி ரசீதுகள், உங்கள் பெயர் மற்றும் முகவரி உள்ள ரசீதுகளை அப்புறப்படுத்துமுன் கிழித்துவிடுங்கள். இது Application குற்றம் நடக்காமல் தவிர்க்கும்.
  •  எளிதாக யூகிக்க முடியாத password ஐ பயன்படுத்தவும். பெயர், பிறந்த தேதி, வண்டி எண் இதுபோன்றவற்றை password ல் பயன்படுத்த வேண்டாம்.
  • ஒரே passwordஐ தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். மாற்றிக் கொள்ளுங்கள்.
  • கார்டின் பின்புறமுள்ள CVV எண்ணை மனதில் பதிய வைத்துக்கொண்டு அழித்து விடவும்.
  • உங்கள் பரிமாற்றம் குறித்த SMS மற்றும் email alert களுக்கு வங்கியில் பதிந்து கொள்ளுங்கள்.
  • கடைகளில் கார்டு மூலமாக பணம் செலுத்தும்போது, கார்டை உங்கள் பார்வையிலிருந்து மறைக்காமல் பார்த்துக்கொள்ளவும். 
  • websiteல் பணப்பரிமாற்றம் செய்யும் போது அந்த websiteன் நம்பகத்தன்மைக்கு VISA அல்லது Master card secure code உள்ளதா என்று கவனிக்கவும்.
  • வெப்சைட்டின் முகவரி https. என்று உள்ளதா என்று கவனிக்கவும்.
  • ATMல் பணம் எடுக்கும்போது வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம்.
  • உங்கள் கார்டை வேறு யாரிடமும் கொடுக்க வேண்டாம்.
  • PIN எண்ணை எழுதி வைக்க வேண்டாம். எழுதினாலும், கார்டுடன் வைக்க வேண்டாம்.
  • கார்டு தொலைந்து போனால், உடனடியாக வங்கியில் தெரிவித்து கார்டை முடக்கி (block) விடவும்.


திருடர்கள் இன்னும் பல்வேறு புது வழிகளில் (VISHING, SPOOFING, MONEY MULE...etc) திருட முயற்சி செய்வார்கள். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நவீன பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

ATM ல் எதாவது புதிதாக அல்லது வினோதமாக தென்பட்டால் (படத்தில் உள்ளதைபோல்) அந்த ATM machine ஐ பயன் படுத்த வேண்டாம். 



wireless கேமெரா, உங்கள்  pin அல்லது Password ஐ தெரிந்து கொள்வதற்காக. 


பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் இருக்கும். நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த கட்டுரையில் அளித்த தகவல்கள், என் உடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் தன் வங்கிக் கணக்கிலிருந்து 20,000 ரூபாய் அவர் பயணத்தில் இருந்தபோது) போலி கார்டு மூலம் திருடப்பட்ட பின், தெரிந்து கொண்டது. 

உங்கள்  கருத்துக்கள் மற்றும் இந்த கட்டுரையில் விட்டுப்போன அல்லது புதிய  தகவல்களை  தெரிவிக்கவும்.
நன்றி!


Sunday, June 17, 2012

நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு

ன்னை பிறந்த நாளில் உங்கள் அன்பின் வெளிப்பாடாக  வாழ்த்திய  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இதற்கு காரணமான என் பெற்றோருக்கு நன்றி. நண்பர்களின் பிறந்த தினங்களை நினைவுறுத்தும் facebook க்கு நன்றி. நோபல் பரிசைக் கூட ஏற்காமல்  நிராகரிக்கலாம், மறுக்கலாம். இந்த பிறந்தநாள் வாழ்த்தை மட்டும் யாராலும் ஏற்காமல் இருக்க முடியாது.
சொன்னவற்றை விட சொல்லாதவற்றிற்கு நன்றி. நீ பிறந்ததால் இவ்வுலகிற்கு என்ன நன்மை என்று கேட்காததற்கு நன்றி. பிறந்த நாளை என்னுடைய பழைய பதிவு இரண்டினுடன் (goo.gl/TfY2ggoo.gl/5H6hu) ஒப்பிட்டுப் பார்த்தேன். ஒரு கேள்வி என்னுள் எழுந்தது. கருவில் இருந்தது பத்துமாதம். ஆனால் பிறந்தநாள் கொண்டாடுவது பனிரெண்டு மாதத்திற்கொருமுறை.  ஏன் ? பத்துமாதக் கணக்கில் கொண்டாடினால் என் வயது இப்போது 32.4. வயதைக் குறைத்துச் சொல்லவே பனிரெண்டு மாதக் கணக்கு  (என் வயது 27).


பிறந்தநாள் வாழ்த்தைப் பற்றி எனக்கு இன்னொரு கருத்தும் உள்ளது. "வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்". வயதில் மூத்தவர்களை பிறந்தநாளில் வாழ்த்தாமல் வணங்குவது. இது சரியில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் எந்த ஒரு நூலின் தொடக்கத்திலும் கடவுள் வாழ்த்து பாடப்படுகிறது. கடவுள் மிகப் பெரியவன் என்கிறது ரிக் வேதமும் இஸ்லாமும். ஆக கவிஞர்கள் கடவுளை விட வயதில் மூத்தவர்களா? தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. தமிழை விட வயதில் மூத்தவர்கள் யாரேனும் இருக்கின்றனரா? வாழ்த்த மனம் தான் முக்கியம். வயது அல்ல.

நேற்று இரவு இறந்தேன், இன்று காலை பிறந்தேன். திருவள்ளுவர் வார்த்தையிலே இப்படி...
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு.
தினம் தினம் பிறந்தநாள் தான். இரவில் தூங்குவது இறப்பின் சின்ன வெள்ளோட்டம்.

பிறந்த நாள் வாழ்த்தின் சிறப்பென்ன தெரியுமா?
same to you சொல்ல முடியாது :)

உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !!!


Saturday, June 9, 2012

రైతు శోధన ........... లో (Raitu śōdhana........... Lō)

Tamil language link: எங்கே விவசாயி? (source)
Assamese language link: Krikhokor hondhanot 
My heartful thanks to Mr. Nageshwar Rao for Telugu translation




don't hesitate to give your comments, suggestions, opinions, corrections.......


for typing in  বাংলা  ગુજરાતી  हिंदी  ಕನ್ನಡ  മലയാളം मराठी  नेपाली ଓଡ଼ିOriya,  ਪੰਜਾਬੀ ,   தமிழ் తెలుగు and  اردو  . follow the link & download a small app to your computer, this works in offline very well. 
http://www.google.com/ime/transliteration/

Monday, April 23, 2012

शेतकरयांच्या शोधात.....................(Śētakarayān̄cyā śōdhāta..........)



My heartful thanks to Dr. Rajaram Patil for Marathi translation. 

English language link : In search of farmer……
Bengali language link:  নতুন দিনের কৃষকদের খোঁজে ????
Telugu language link రైతు శోధన ........... లో
Tamil language link: எங்கே விவசாயி? (source)
Assamese language link: Krikhokor hondhanot 



भारतासाठी हि एक शरमेची बाब आहे कि कापूस उत्पादक शेतकऱ्यांच्या आत्महत्या सामान्य गोष्ट बनून राहिलेली आहे,जर हे थांबवायचं आसेल तर आपण ज्यांनी नुकताच पोंगल जो खरोखर शेतकऱ्यांचा सण आहे तो मोठ्या उत्साहात साजरा केला यावर नक्कीच विचार केला पाहिजे .फार थोड्या वर्षापूर्वी भारत आपल अधिकच उत्पादन परदेशी निर्यात करत होता परंतु गेल्या कांही  वर्षांपासून आपण अन्नाबाबतीत परावलंबी झालो आहोत ,आपणास भात, गहू ,डाळी आणि साखर यांची आयात करावी लागत आहे व आपली शेतीयोग्य जमीन आणि उत्पादकता दोन्ही
संकुचीत होत आहे ,या परिस्थितीने सन १९९६-२००७ या कालावधीत जवळपास १,५०,००० शेतकरयांचे जीवन संपवले आहे ,दुर्दैवाने परिस्थिती अशीच राहिली तर भारतास परकीयांवर पूर्णतः अवलंबून राहून  अन्नाची भीक मागावी लागेल, भविष्यात अशा परिस्थीतीचे शिकार आपणच असू .
कापूस उत्पादक शेतकरी आत्महत्या का करतात ? भाव नाही म्हणून,कमी उत्पन्न,खते,बी बियाणे यासाठी काढलेल्या कर्जामुळे कि विशेषतः बी टी बियाण्यामुळे ?.


शेतकरी हा पैश्याच्या  हव्यासापोटी कापूस हे पिक वारंवार एकाच जमिनीत घेतो त्यामुळे  जमिनीची सुपिकता संकटात येते आणि मग जास्त प्रमाणात खते आणि कीटक नाशके वापरण्यास तो मजबूर होतो ,नवीन वा प्रतिकार क्षमता वाढलेल्या किडी त्याला आणखीनच हतबल करतात,रोग आणि किडीचा प्रतिबंध त्याला परवडेनासा होतो.आपण अगदी शालेय जीवनापासून शिकत आहोत कि पिकांची फेरपालट आणि सुपिकता याचा सहसंबंध असतो.कापुस उत्पादक शेतकरी  आत्महत्या का करतो निराशेतून ?,आपण सारे शेतीतून पिकवीलेले खातो पण शेती आणि शेतकऱ्यास कधी प्रतिष्ठित मानत नाही वा प्रतिष्ठा देत नाही ,सर्वात महत्वाचे म्हणजे शेती हा कांही आता फायदेशीर व्यवसाय राहिलेला नाही ,आडते ,व्यापारी,दलाल आणि आता सुपर मार्केट्स हेच खरे नफा मिळवतात, असे कोणते औद्योगिक उत्पादन आहे कि त्याची किमंत ग्राहक ठरवतो? उदाहरणार्थ पेन घेवू त्याची किमंत हि त्याच्या  कच्च्या मालाची किमंत, प्याकिंग , वाहतूक, उत्पादकाचा नफा, दलालांचा फायदा, कर या सर्वानी मिळून बनते पण हेच शास्त्र कृषी मालास मात्र लागू पडत नाही. कृषी मालाची किमत मात्र विकत घेणारा ठरवतो ,भारत हा त्याच्या नैसर्गिक संपदेमुळे कधीही अभावग्रस्त देश न्हवता परंतु इतिहास काळात भारताला जो  दुष्काळाचा  सामना करावा लागला तो त्या वेळच्या शासकांच्या प्रशासकीय चुकांमुळे जसे कि ब्रिटीश काळी दुहेरी कर, एक तृतीयांश उत्पादन कर म्हणून घेत ई. एक प्रवाद असा आहे कि शेतकरी कुटुंबातील शिकलेला विद्यार्थी शेती व्यवसायाकडे पाठ फिरवतो. असे कुठल्या उद्योगपती बाबत घडेल कि त्याचा वारस त्याचा पावलावर पावुल ठेवणार नाही कारण फक्त तो शिकलेला आहे म्हणून वस्तुतः व्यवसाय जर फायदेशीर असेल तर निश्चितपणे तो व्यवसाय स्वीकारील जो त्यांच्या वाडवडीलांचा आहे, फक्त राजकारण हे एकच क्षेत्र असे नाही तर अशी भरपूर उदाहरणे देता येतील.



जगात कापूस उत्पादनात भारत  न. २ आहे. कोणताही देश जागतिक दृष्ट्या कायमच पहिल्या दुसऱ्या न. वरती राहू शकत नाही. कारण जमिनीची सुपिकता त्याला तसे राहू देत नाही, एक तर एक पिक करून जमिनीची सुपिकता हरवून जाते याला अपवाद म्हणजे ,ताग ज्यात भारत आणि बांगलादेश हे नेहमी पहिले आणि दुसरे जागतिक उत्पादक  आहेत आणि हे कधी बदलेल वाटत नाही कारण जगात दुसऱ्या देशांकडे तागांसाठी योग्य हवामान नाही. आपण हे असेच चालू द्यायचे का? तुम्ही आणि मी यामुळे निश्चितच प्रभावीत होणार आहोत. मला माझे नेमके विचार लिखाणातून तुमच्या पर्यंत पोहचवणे थोडेसे अवघड होत आहे. पण आपण जर या विषयी थोड्या गंभीरतेने विचार केला तर परिस्थिती पुरेशी स्पष्ट होईल. मला वाटत कि मी यासाठी काही तरी करायला हवं, कमीत कमी एखादा छोटासा प्रयत्न तरी, मला वाटत प्रत्येक खेड्यात शेतकऱ्यांनी एकत्र येऊन स्वतः गट स्थापावेत ,बचत गटसारखे आणि गट शेती करावी धान्य,भाजीपाला,फळे,फुले आणि तेलबिया जमिनीच्या सुपिकतेशी तडजोड न करता घाव्यात जेणे करून वर्षभर सर्वाना काम असावे अशा पद्धतीने लागवड करावी एक अशी योजना असली पाहिजे कि त्यात गुंतवणूक, काम आणि नफा हे सर्व नियंत्रित असाव हि योजना व्यवस्थीतपणे राबवली गेली पाहिजे यासाठी सरकारी मदतीची निश्चीतच गरज आहे सरकार/शासन यासाठी एक वेगळा विभाग स्थापू शकत किंवा आहे त्या कृषी केंद्र मार्फत प्रत्येक जीलाय्हात जिल्हयात जाळ विनु शकत. हि केंद्रे जमिनीची सुपीकता पाण्याची उपलब्धता लक्षात घेऊन त्या विभागासाठी/क्षेत्रासाठी पद्धती ठरवतील व त्यासाठी लागणारी तांत्रिक वा  सर्व प्रकारची मदत देऊ शकतील बँका हि यात अतिशय महत्वाची भूमिका योग्य वेळी पतपुरवठा करून निभावू शकतील भारत जर शेजारील देश जसे अफगाणिस्तान,बांगलादेश,आफ्रिका यांना मदत करतो तर स्वतःच्या शेतकऱ्यांना का मदत देऊ शकत नाही. सर्व प्रकारचे वेगवेगळे कर आपल्याकडे आहेत त्यामुळे अशा प्रकारच्या योजनांसाठी कर लावणे अशक्य नाही. पिकांची फेरपालट, जमिनीची सुपिकता कायम ठेऊ शकते आपण यासाठी जंगलाचा आदर्श घेऊ शकतो जिथे कधी किडीमुळे सर्व काही नष्ट झालेलं पाहायला मिळत नाही शेतकऱ्यांना प्रत्येक सुगीत फायदा मिळाला पाहिजे मित्र पिकामुळे जरी एखाद पिक गेल तरी बाकीची पिक त्याला तारू शकतील गुंतवणूक, पैशाची आणि श्रमाची वाया गेली नसली  पाहिजे. नैसर्गिक आपत्तीत सर्व काही नष्ट होईल अशी व्यवस्था नसावी आणि दुर्देवाने अशी परिस्थिती आली तर सरकारने योग्य ती भरपाई करून दिली पाहिजे ,वीज हि एक अशी गोष्ट आहे कि सरकारने ती प्राधान्याने पुरवायला हवी ,बहुराष्ट्रीय कंपन्यांना वीज देण्यापेक्षा तेवदीच वीज कितीतरी हेक्टर शेतीसाठी उपयोगी पडेल .नवनवीन उधोगाना सवलती देण्यापेक्षा त्या शेतीला दयाव्यात किंवा शेतीपूरक जसे कि बियाणे ,खाते , कृषी अवजारे ,अन्न प्रक्रिया ,ई. उद्योगांना सर्वात जास्त सवलती असाव्यात .


यामुळे कांही उलथापालथी होवू शकतील पण मुठ्भरांसाठी सर्वाना जगवणारी जमीन नापीक होऊ नये म्हणून हे करावे लागेल ,सुपिक् जमीन,परंपरागत ज्ञान असणारा शेतकरी यांना हरवले तर ते परत तयार होणे मुश्कील ,सर्वात महत्वाचा धडा आपण हरीतक्रांतीतून घेतलेला आहे कि फक्त हायब्रिड बियाणे ,रासायनिक खते आणि कीटकनाशके म्हणजे शेती न्हवे तर फुकुओका आणि इतर नैसर्गिक शेती त्य् तज्ञां कडून आपण शिकल पाहिजे कि जास्त कृषी उत्पादन हे फक्त निसर्गाशी सहकार्य करूनच मिळवता येते ना कि निसर्गावर विजय मिळवून ,दुसरा एक धोका असा दिसतो कि जनुकीय परावर्तीत बियाण्यांना दिलेली परवानगी ,जिवानुंतील विषारी गुणधर्म पिकात आणून पिकच किडीला विषारी बनवणे म्हणजे जमिनीला देखील विषारी बनवणे होय ,वस्तुस्थिती अशी आहे कि बरेचसे आफ्रिकन देश या बी .टी बियाण्याच्या विरोधात आहेत कारण त्यांच्या मते हे त्यांची सुपीक जमीन नासवून टाकेल .
शेतकऱ्यांना नैसर्गिक,सेंद्रिय ,बायोडायनामिक ,पारंपारिक अशी कोणत्याही प्रकारची शेती करू द्यावी ना कि कशाची सक्ती करावी प्रथम त्यांना जमिनीची सुपिकता टिकवून शेती करण्यास प्रोत्साहन द्याव आणि नंतर हळूहळू शाश्वत शेती करण्यास प्रोत्साहन द्याव.


don't hesitate to give your comments, suggestions, opinions, corrections.......

for typing in  বাংলা ,  ગુજરાતી ,  हिंदी ,  ಕನ್ನಡ ,  മലയാളം मराठी ,  नेपाली ଓଡ଼ିOriya,  ਪੰਜਾਬੀ ,   தமிழ் తెలుగు and  اردو  . follow the link & download a small app to your computer, this works in offline very well.