Posts

தோட்டா துளைக்காத கவச உடை - Bulletproof jacket

Image
நாம் எப்போதும் அணியும் உடைகள், ஒரு துணி அல்லது இரு துணி அடுக்குகள் கொண்டு தைக்கப்பட்டிருக்கும். கவச உடை சாதாரண உடையப் போல் இல்லாமல் சுமார் 20-40 அடுக்கு துணிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இவ்வுடையிலிருக்கும் நூலிழைகள் அதிக வலிமையையும் குறைந்த நீளும் தன்மையும் கொண்டிருக்கும். பாரா அராமிட் (para aramid) இழைகள் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு கிராம் முதல் 20 கிராம் வரையும் நொடிக்கு 200 முதல் 800 மீட்டர் வேகத்திலும் தாக்கக் கூடிய துப்பாக்கி தோட்டாக்களை தாங்கி கவச உடை அணிந்திருப்பவரைக் காக்கிறது. இதன் பின்னணியில் உள்ள அறிவியல் இதுதான். கவச உடை தோட்டாவின் ஆற்றலை உள்வாங்கி குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்டுள்ள பாவு மற்றும் ஊடை நூலிழைகளின் வழியாக பரவவிட்டு தாக்கும் வேகத்தையும் குறைக்கிறது. இவ்வாற்றல் தோட்டா தாக்கிய புள்ளியியை நோக்கி அலை போல் ஆடை அடுக்குகள் உள் நோக்கி குவிந்து ஆற்றல் பரவுதலை சமன்படுத்தும். தோட்டாவின் வேகம் குறைந்து குவிந்த துணி அடுக்குகள் தன் இயல்பு நிலைக்குத் திரும்பும் போது துணி அடுக்குகளினுள் சிக்கி கவச உடை அணிந்திருப்பவரைக் காக்கும். இந்த ஆற்றல் குறைப்பு கவசப...

இரவு நேரத்தில் பயணிப்பது ஒரு வித அனுபவம்

நந்தனம், சென்னை ஒரு வெள்ளிக்கிழமையில் இல்லை, இல்லை. வியாழக்கிழமை இரவு ஊருக்குச் செல்லக் கிளம்பினேன். இரவு உணவு முடித்துவிட்டேன். பத்து மணிக்கு அறையை விட்டுக் கிளம்பினேன்.  இரவு நேர பேருந்துகளில் பயணிப்பது ஒரு வித அனுபவம். யார் தான் இந்த பேருந்து பலகை நிறங்களைத் தேர்வு செய்வார்களோ? இரவு நேரங்களில் பெயர்பலகையின் நிறம் கருப்பில் வெள்ளை எழுத்துக்கள். நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுருந்தேன். சில பேருந்துகளும், நிறைய லாரிகளும் விரைந்து போய்க்கொண்டிருந்தன.   நான் எதிர்பார்த்த இரவுநேர (நைட் சர்வீஸ்) பேருந்து இன்னும் வரவில்லை. ஒரு நாய் என் அருகில் வந்து குறைத்தது. நான் நகர்ந்து நின்றதும், சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்து விட்டு படுத்துவிட்டது. எதிர்பார்த்தது போல கருப்பு நிற பலகையுடன் தாம்பரம் செல்லும் இரவுப் பேருந்து வந்தே விட்டது, கை நீட்டி வண்டியை நிறுத்தினேன். கத்திப்பார ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு எங்கே அமர்வது என்று யோசித்தேன், என்னைத் தவிர மூவர்தான் பேருந்தில் இருந்தனர். நடத்துனர் தன் பையை இன்ஜின் மேல் போட்டுவிட்டு ஓட்டுனருக்கு வலதுபக்க இருக்கையில் அமர்ந்து எதையோ பற்...

தாதூண் பறவைகள் - பறவைகளும் தண்ணீரும்

Image
மலைகள் இணைய இதழ் 4 ஆம் ஆண்டு சிறப்பிதழில் பதிப்பிக்கப்பட்ட என் கட்டுரை   http://malaigal.com/?p=6705 கட்டுரைச் சுருக்கம்: இவ்வுலகில் உள்ள 8650 பறவையினங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை உணவுக்காக வளர்க்கப்படும் பறவைகளான கோழி, வாத்து மற்றும் வளர்ப்புப்பிராணிகளாக வளர்க்கப்படும் பறவைகளும் தான். 8650 இனங்களில் 1200 இந்தியாவில் காணலாம். நிலத்தின் மேல் உள்ள நீர்நிலைகள் அளவில் சுருங்கி மாசடைந்து குளங்கள், ஏரிகள், ஆறுகள் விஷ சாக்கடையாக உள்ளன. போர் போட்டு தொட்டியிலும் புட்டியிலும் நீரை அடைத்து வைத்துள்ளோம். நீர் இல்லாமல் நமக்கு நா வரளும். வியர்வை சுரப்பியற்ற பறவைகளுக்கு உடலும் வரளும். பறவைகள் தாகம் தணிக்க எங்கே தேடியலையும்? பறவைகளின் நீர் குடிக்கும் பழக்கங்கள், நீர் தேவை போன்றவற்றின் காரணங்கள்.  சில வாரங்களுக்கு முன் நான் காலையில் பணிக்குச் செல்ல விரைந்து நடந்து கொண்டிருந்தேன். சாலை ஓர மர நிழலில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி கையை நீட்டி என்னை அழைத்தாள். ‘என்னம்மா வேண்டும்’ என்று கேட்டு விட்டு நின்றேன். மூதாட்டி தன் கையிலிருந்த வாட்டர் பாக்கெட்டை என்னிடம் கொடுத்தாள். எனக்கு ...

புது வருட ரெசல்யூஷன் :)

Image
நியூ இயர் வருது உங்கள் ரெசல்யூஷன் என்னங்க?  640*780 HD. தம்பி என் மொபைலுக்கு தான கேட்டீங்க? டீவி க்கு 1084 இருக்கும். என் வீட்டுல வேற எந்த ரெசல்யூஷனும் இல்லை. உங்க புத்தாண்டு சபதங்கள் என்ன?  யாருகூடவும் நமக்கு பகை இல்லைங்க தம்பி. அதனால "இந்த நாள்.... உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ......" அப்டினு சபதம் எதுவும் விடலை.  உங்களுக்கு புது வருஷ கொண்டாட்டம் எதுவும் இல்லைங்களா? கொண்டாடலாமுன்னு ஒருதரம் ஆரம்பிச்சேன். இருபது முப்பது நாளுக்கு ஒருமுறை கொண்டாடும்படி ஆகிப்போச்சி.  என்னண்ணே சொல்றீங்க?  சீன நியூ இயர், சிறீலங்கா நியூ இயர், கன்னட நியூ இயர், முஸ்லீம் நியூ இயர், கிரிஸ்டீன் நியூ இயர், தமிழ் நியூ இயர், இப்படியே ஆப்பிரிக்கா, அண்டார்க்டிக்கா, நெப்டியூனின் நியூ இயர் வரைக்கும் கொண்டாடிட்டேன். இதுக்கெடயிலே எனக்கு 30 பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்துச்சி, இப்போ "அண்ணனை  வாழ்த்த வயதில்லை ...." அளவுக்கு ஆகிப்போச்சி பாத்துக்கோங்க. இதனால ஐநா வுக்கு போட்டியா பல தினங்களை கொண்டாடிட்டேனு கிப்டு எல்லாம் வந்து குடுத்தாங்க தம்பி. 

அதிமதுரம் Liquorice

Image
அதிமதுரம்: தாவரப்பெயர்:Glyeyrrhiza glabra.ஆங்கிலத்தில் Liquorice, ஹிந்தியில் மூலேதி (मुलेठी) இது ஒரு சர்வதேச மருத்துவ மூலிகை. உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கொடிவகையை ச் சார்ந்தது. நட்ட 3 (அ) 4 ஆண்டுகளில் அறுவடை செய்யப்படும். எந்த மண்ணிலும் நன்றாக வளரும். தொட்டிகளில் மாடியில் வளர்த்து கீழே தொங்கவிடலாம். முல்லைக்கொடி போல மாடிமேலே ஏற்றலாம். வீட்டின் முன் ஆர்ச்சில் படரவிடலாம். அழகுக்காகவும் மருந்துக்காவும் வளர்க்கலாம்.  பயன்படும் பாகங்கள்: வேர்த்தண்டு மற்றும் வேர்கள்.தண்டு, கிழங்கு பூமியின்3,4 அடிஆழத்தில் பரவலாகக்கிடைக்கும்.  இலைகள் இனிப்பு சுவையும் வெப்பத்தன்மையும், வேர் இனிப்பு சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.   சீன மருத்துவத்தில் உடலைப்'புதுப்பிக்கும் மருந்தா கப் பயன்படுத்தப்பட்டது. பல்வேறு மருத்துவப் பொருள்களுடன்அதிமதுரம் சேர்க்க ஓராயிரம் நோய் போக்கும் என பாட்டி வைத்தியம் கூறுகிறது. அதிமதுரப் பொடி சித்தாவிலும்,அலோபதியிலும் பயன்படுத்தப்படுகிறது. சுவைக்காக ஐஸ்கிரீம்,,மிட்டாய்கள், சிரப்புகளில் அதிமதுரம் சேர்க...

வட்டப்பாத்தி விவசாயமுறை - Permaculture

Image
வட்டப்பாத்தி விவசாயமுறை பயிற்சி முகாம்     திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தில் திருவேங்கடம் அவர்கள் நிலத்தில் நம்மாழ்வாரின் "வட்டப்பாத்தி ” விவசாயமுறை பயிற்சி முகாம் 15.06.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மலை 5.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை , விழுப்புரம் , சென்னை , புதுவை மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் , இயற்கை விவசாய ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பயிற்சி இடம் தேக்கு மரத் தோப்பு. அதைச் சுற்றி நாற்புறமும் கரும்பு வயல் , குளிர்சாதன அரங்கு போன்ற இயற்கைச் சூழல். இயற்கை அன்னையை வணங்கி பயிற்சி துவங்கியது. முதலில்  நிலத்தை  வளப்படுத்துதல் , காலத்திற்கேற்ற பயிர் வகைகள் , நடும் முறைகள் , நிலத்தில்   முதலில் உரிமையாளர் நடுதல் , அதன் பின் மற்றவர் நடுதல்பற்றி கூறப்பட்டது. மூலிகை , சிறுதானியம் , செடி , கொடி , மரம் , பூ , காய்கறி , கீரை , இவைகள் நடுவதற்கான மாதம் , கிழமை , நேரம் கூறப்பட்டதுடன் பனிக்காலத்தில் நடக்கூடாது என்பதற்கான காரணம் கூறப்பட்டது. இச்செய்திகளை மரம் பற்றிய நூலி...