Posts

Showing posts from May, 2013

கரை சேர்க்குமா கட்டாய படிப்பு..... முதல் பாகம்

Image
பள்ளிக்கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? அடிப்படையில் மேற்படிப்பு என்பதே அடுத்து தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி பெறுவதற்கும்தான். அதாவது குறிப்பிட்ட துறையில் வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளுக்கான பணத்தை சம்பாதிப்பதற்காகத்தான். மாணவர்கள் தன் சுயவிருப்பத்துடன் ஒரு துறையை படிக்கத் தேர்ந்தெடுத்து அப்படிப்பின் தொடர்புடைய துறையில் பணியாற்றும்போது முழு ஈடுபாடு இருக்கும். பணம் சம்பாதிப்பதும் அதனுடன் சேர்ந்து நடக்கும். இதே பிடிக்காத துறையில் படித்து பணியாற்றுபவனு(ளு)க்கு பணம் சம்பாதிப்பது ஒன்றே முக்கிய நோக்கம். பணி இரண்டாம்பட்சம் தான். (கட்டாயத்தின் பேரில் படித்த மாணவர் படிப்பிலும் நாட்டமின்றி தெளிவான புரிதலுமின்றி படித்து முடித்து வேலை கிடைப்பதும் கடினம்). இங்கே தொழில் ஈடுபாடில்லாததால் பணம் சம்பாதிப்பது ஒன்றே அத்தியாவசியமாகிறது. ஆகவே விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களால் தரமான பொருளோ, சேவையோ தரமுடியாது. இதுபோன்று விருப்பமில்லாத துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை எந்த நாட்டில் அதிகமாகிறத...

கரை சேர்க்குமா கட்டாய படிப்பு ..... இரண்டாம் பாகம்

Image
விருப்பமில்லாத துறையை தன் வாழ்நாளை சுமூகமாக ஓட்ட பொருளாதாரத்தை தேட தேர்ந்தெடுப்பதால் பல பாதகமான விளைவுகள் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் ஏற்படுகிறது என்பதை இப்பதிவின் முதல் பாகத்தில் பார்த்தோம். இப்போது இந்த நிலை ஏன் ஏற்பட்டது, இதற்கான தீர்வுகள் என்ன என்றும் பார்ப்போம். பணம் உள்ளவர்கள் வசதியாகப் பிரச்சினை இன்றி வாழ்வதாகத் தெரிவதால் அதுவே நோக்கமாக பலருக்கு இருக்கிறது. அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாத போது பலர் எந்த வழியில் பணம் நிறைய கிடைக்குமோ அதைத் தேர்ந்தெடுக்கின்றனர். 25 - 30 வயது ஆனபின்னர் தான் தாம் செய்த தவறு தெரிகிறது. அதன் பின்னர் திருமணம் , குழந்தை என்றானபின் , தனி நபர் விருப்பம் என்பது இரண்டாம் இடத்திற்குச் சென்று விடுகிறது.   இது போன்று விருப்பமில்லாத துறையை தேர்ந்தெடுப்பது எதனால் நேர்கிறது என்றால் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கான பரந்துபட்ட பல்வேறு துறைகள் வேலைகள் தொழில்கள் இருப்பது இளவயதினருக்கு தெரியாமல் இருப்பதுதான். பெற்றோர்களும்  ஆசிரியர்களும் அதற்கும் மேலாக கல்விக்கொள்கையும் பள்ளி மாணவர்களுக்கு பலவகைப்பட்ட வேலைவாய்ப்பு துறைகளையும் தொழில்களையும் அறிமுகப்படுத்து...

Krikhokor hondhanot (In Search of farmer... in Assamese)

Image
My heartfelt thanks to Ms. B abita Mahanta for Assamese translation English language link :  In search of farmer……   Bengali language link:    নতুন দিনের কৃষকদের খোঁজে  ???? Marathi language link:  शेतकरयांच्या शोधात........................ Tamil language link:  எங்கே விவசாயி ?  (source) Telugu Language link:   రైతు శోధన ........... లో     don't hesitate to give your comments, suggestions, opinions, corrections....... for typing in     বাংলা  ,    ગુજરાતી  ,    हिंदी  ,    ಕನ್ನಡ  ,    മലയാളം ,    मराठी  ,    नेपाली   ,  ଓଡ଼ି Oriya,    ਪੰਜਾਬੀ   ,     தமிழ் ,    తెలుగు   and    اردو    . follow the link & download a small app to your computer, this works in offline very well.  http://www.google.com/ime/transliteration/

"நான்" அவன் இல்லை. நான் யார்?

Image
இந்த உலகில் மிக சிலரே “நான்” என்ற அனுபவத்தை அடைந்ததாக உணருகிறேன், என்னை பொறுத்தவரை “நான்” என்பவன் அவன் நினைப்பதை செய்பவன், யாரையும் எதிர்நோக்காதவன், யாருக்கும் கடமைப்படாதவன், யாரையும் நேசிப்பவன் இங்க திருத்தும் செய்கிறேன் யாவற்றையும் நேசிப்பவன். அவனுடைய உறைவிடம் இந்த உலகம்... அவனுக்கு உள்ள சொந்தம் இந்த பூமி தாய்... அவன் அவளை நேசிக்கிறான். அவளை புரிந்துகொள்ள நினைக்கிறான். ஆனால் அகங்காரம் கொண்ட உலகானது அந்த அனுபவத்தை அவனுக்கு தர மறுக்கிறது, அதன் பக்கத்திலும் நியாயங்கள் இருக்கதான் செய்கிறது என்ன செய்ய ? “நான்”, அவன் கடவுளுக்கு கீழே உள்ளவன் அவனுடைய வேலை அவன் தாயை புரிந்துகொள்வது. “நான்” வாழ்நாள் முழுவதும் அலைவான், நிரந்தரத்தை வெறுப்பவன், முடிவிலியை தெரிந்துகொள்ள ஆசைப்படுபவன் அவனுடைய ஆசைகள் எபோதும் நிறைவேறபோவதில்லை என அறிந்தும் அதை அடைய முற்படுபவன். “நான்” ஒரு தனி மனிதன், தனித்த மனிதன் ,தனிமையின் அழகை உணர்ந்த மனிதன். அதன் கிறக்கத்திலிருந்து மீண்டு வர மனமில்லாதவன்.. அவன் நடக்கிறான். சில நேரங்களில் பறக்கிறான்.. புரியவில்லை பரிணாமத்தில் அதற்கு வழியில்லையே என்றாலும் “நான்’ பறக்கிறான்...