Posts

Showing posts with the label chennai

தமிழ் மொழியும் மென்பொருள்கருவிகளும், News on demand, Tree bus stop

Image
மொழியும் மென்பொருள்கருவிகளும் சாப்ட்வேர் வளர்ந்து விட்டது என்று பலரும் பேசிப் பேசி அலுத்து விட்டது. இந்த வளர்ச்சி தமிழுக்கு என்ன தந்தது? என்ற சந்தேகம் எழுகிறது. கணினியில் இங்கிலீஷ் (English தமிழிலும் இங்கிலீஷ் தான்) பயன்படுத்தப் படுவதைப் போல தமிழைப் பயன்படுத்த முடியவில்லையே. கணினியில் தமிழ் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை (spell check, grammar check) சுட்டிக் காட்டவோ திருத்தம் செய்யவோ இன்னும் செயல் பாட்டளவில் வழி ஏற்படுத்தவில்லை. இங்கிலீஷ் தவிர இன்னும் பல மொழிகளுக்கு இந்த வசதிகள் உள்ளன. கூகிளும், மைக்ரோசாப்ட்டும் வணிகத்துக்காக மட்டுமே  தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டார்கள். இந்த இரு வசதிகள் மட்டும் இருந்திருந்தால் எழுத்துப்பிழைகளே இல்லாத விளம்பரங்கள், அறிவிப்புகள், சமூக வலைக் கருத்துக்களை நாம் அனுபவித்துக் கொண்டிருப்போம். மேலும், தமிழ் வார்த்தைகளை ஒலியாக கேட்கவும், தமிழில் பேசினால் வார்த்தையாக தட்டச்சு (text to speech, voice input) செய்யவும் முடிய வில்லை. இங்கிலீஷில் இவை எல்லாம் சாத்தியம். இங்கிலீஷ் மொழியில் தவறின்றி தட்டச்சு செய்து அச்சிட முடிந்த தமிழனால் தம...

அண்ணா நூற்றாண்டு நூலகம் - இன்னும் வேண்டும் இதுபோல் தமிழக நகரங்களிலும்

Image
நண்பர் பிரேம்குமார் அவர்களின் அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய கவிதை. வலைப்பூவில் பதிப்பிக்க கேட்டேன். உடனே எழுதித் தந்த புலமைக்கு நன்றிகள். இதுபோல இன்னும் பல சிறந்த படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள். அ வசரமான சென்னையில்     ஓர் ஆரவாரமற்ற கண்ணாடி மாளிகை. அரிய மரங்களை அழித்து விட்டு யாரையோ பலி தீர்க்க அவசர கதியில் வளர்ந்திருக்கும் ஓர் அழகிய கட்டிடம். ஓயா நகருக்குள் ஓயாமல் இயங்கும் ஓர் கட்டிடம். வெறும் மண்ணின் மூலக்கூறுகளால் மட்டும் வானளாவி மோதி நிற்கும் ஓர் அழகிய கட்டிடம். இங்குள் எட்டடுக்கு மாளிகையின் அலங்கார அலமாரிக்குள் மர மம்மிக்கள். ஆம் வெவ்வேறு   ( அரச)மரங்களின் தியாகத்தால் தன்னை வெட்டி – அறுத்து – நொருக்கி   -   அமுக்கி –   பிழிந்து பின் தன் மேல் பதிக்க விடவிட்டு கொடுத்த எழுத்துகளால் கோர்க்கப்பட்டு நூல்களாக்கப்பட்ட மம்மிக்களின் குடோன். மனசாட்சி மாறிப்போன மனித விலங்கை நெறிபடுத்த இங்கு இத்தொகையை விட இந்நூல்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. அணுகுண்டே தலை மேல...