இரவு நேரத்தில் பயணிப்பது ஒரு வித அனுபவம்

நந்தனம், சென்னை
ஒரு வெள்ளிக்கிழமையில் இல்லை, இல்லை. வியாழக்கிழமை இரவு ஊருக்குச் செல்லக் கிளம்பினேன். இரவு உணவு முடித்துவிட்டேன். பத்து மணிக்கு அறையை விட்டுக் கிளம்பினேன்.  இரவு நேர பேருந்துகளில் பயணிப்பது ஒரு வித அனுபவம். யார் தான் இந்த பேருந்து பலகை நிறங்களைத் தேர்வு செய்வார்களோ? இரவு நேரங்களில் பெயர்பலகையின் நிறம் கருப்பில் வெள்ளை எழுத்துக்கள். நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுருந்தேன். சில பேருந்துகளும், நிறைய லாரிகளும் விரைந்து போய்க்கொண்டிருந்தன.   நான் எதிர்பார்த்த இரவுநேர (நைட் சர்வீஸ்) பேருந்து இன்னும் வரவில்லை. ஒரு நாய் என் அருகில் வந்து குறைத்தது. நான் நகர்ந்து நின்றதும், சுற்றிச் சுற்றி மோப்பம் பிடித்து விட்டு படுத்துவிட்டது. எதிர்பார்த்தது போல கருப்பு நிற பலகையுடன் தாம்பரம் செல்லும் இரவுப் பேருந்து வந்தே விட்டது, கை நீட்டி வண்டியை நிறுத்தினேன். கத்திப்பார ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு எங்கே அமர்வது என்று யோசித்தேன், என்னைத் தவிர மூவர்தான் பேருந்தில் இருந்தனர். நடத்துனர் தன் பையை இன்ஜின் மேல் போட்டுவிட்டு ஓட்டுனருக்கு வலதுபக்க இருக்கையில் அமர்ந்து எதையோ பற்றி பேசிக் கொண்டிருந்தார்.  நான் ஓட்டுனருக்கு பின் இருக்கையில் அமர்ந்தேன். சைதாபேட்டையில் இருவர் வண்டியை நிறுத்தி ஏறினர். ஒரு குப்பை லாரி கடந்து சென்று விட்டது. அதன் நாற்றம் கடக்க கொஞ்சம் அதிக நேரமானது. கிண்டி யில் பணி முடித்த இரு நடத்துனர்கள் வந்து ஓட்டுனருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தனர். அந்த இரு நடத்துனர்களோடு கத்திப்பாராவில் இறங்கிக் கொண்டேன்.


குளிர்காலம் ஆரம்பித்த தாக்கம் தெரிந்தது. ஏ சி , ஏ சி ....... என்று கத்திக்கொண்டே ஒரு  தனியார் பேருந்து வந்து நின்றது. எங்கு போகும் பேருந்து என்றே தெரியவில்லை. பல வட இந்திய தொழிலாளர்கள் ஆரஞ்சு நிற உடைகயோடும் ஹெல்மேட்டோடும் உரக்கப் பேசிக் கொண்டே சென்றனர். மெட்ரோ ரயில் பணியாளர்களாக இருக்கக் கூடும். இன்னும் ஓரிரு தனியார் பேருந்துகள் வந்து பாதிக்கு மேற்பட்ட சாலையை அடித்துக்கொண்டு நின்றது. கும்போணம், தாஞ்சூர் ஏ சி என்று பயணிகளுக்கு தூண்டில் போட்டபடி அழைத்துக் கொண்டிருந்தனர். இரண்டு கள்ளக்குறிச்சி செல்லும் பேருந்துகள் ஒரே நேரத்தில் பணிகளைத் தாண்டிச்  நின்றதும் பயணிகள் தன் உடமைகளுடன் ஓடினர். திருச்சி பேருந்துகள் காலியாகச் சென்றது. கள்ளக்குறிச்சிக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலைக்குதான் அதிக பேருந்துகள். ஆனால் இன்று எதையும் காணோம். பேருந்து நிழற்குடையில் சைக்கிளில் பிளாஸ்குகளில் டீ விற்றுகொண்டிருந்தவரிடம் பயணிகள் பேருந்து வரும் விவரங்களை விசாரித்துகொண்டிருன்தனர். பேருந்து தகவல் மையமும் குடிநீர் விற்பனையும் இங்கு அமைக்கலாம் திருவண்ணாமலைக்கு ஒரு பேருந்து வந்தது. ஏறும் வழியில் ஏறி அமர இடமில்லாததால் இறங்கும் வழியில் இறங்கி விட்டேன். இரவு நேரப் பேருந்துகள் சிலதும், தாம்பரம்  செல்லும் ஷேர் ஆட்டோக்கள் சிலதும் பயணிகளை கத்திப்பாராவில் குறைத்தது. போளூர் செல்லும் பேருந்து ஒன்று வந்தது. ஏறி விட்டேன். முன்னே தன் இருக்கையில் இருந்த நடத்துனர் வந்து நின்றார். சேத்துப்பட்டு ஒண்ணு என்று நூறு ரூபாய் கொடுத்தேன். சில்லறையும் பயனஸ் சீட்டும் கொடுத்துவிட்டு திரும்ப தன் இருக்கியில் அமரும் முன் பென்டிரைவ்சொருகினார். ஓட்டுனர் தன் பக்கம் இருந்த சுவிட்சை அழுத்தினார். பாடல் கத்தியது. ஒரு குழந்தை அழ ஆரம்பித்தது. யாரும் திட்ட ஆரம்பிக்கும் முன்பே நடத்துனர் சத்தத்தை குறைத்து விட்டார். பல்லாவரத்தில்  நின்றது, தாம்பரத்தில் நின்றதும் நடத்துனர் நேர்க காப்பாளர் அலுவலகத்திற்கு சென்றார். பேருந்திலிருந்த ஒருவர் இயற்கை அழைப்பை ஏற்க இறங்கி ஓடினார். நடத்துனர் வந்து யாராவது வரணுமா என்று கேட்டவுடன் வந்துவிட்டார் இயற்கை அழைப்பை ஏற்றவர். பெருங்களத்தூரில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நம்ம டாய்லெட் என்று  ஒன்று நல்ல வெளிச்சத்துடனும் சுத்தமாகவும் ஒரு விஷயம் தென்பட்டது. சமீபத்திய அரசுத் திட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். படிக்கு பக்கத்தில் அமர்ந்திருந்ததால் குளிர் காற்று தாக்கவே, என் பையில் இருந்த குளிர்தொப்பியை மாட்டிக்கொண்டேன்.   எழுந்து படிக்கட்டின் ஷட்டரை மூடினேன். என் பக்கத்தில் தன் நிறுவன அடையாள அட்டையை பெல்டில் மாட்டிக் கொண்டிருந்த ஒருவர் அமர்ந்திருந்தார்.  எஞ்ஜினுக்கு பக்கத்தில்  இரண்டு மூட்டைகள் அதன் மேல் ஒரு சிறுவன் தூங்கிக்கொண்டும் இருந்தான். இவற்றைத் தாண்டி வந்து பேருந்தில் இருந்த அனைவரையும் எண்ணிக்கொண்டு சென்று திரும்ப தன் இருக்கைக்கு வந்தார். பல பேர் தூங்கி விட்டிருந்தனர், சிலர் காதில் மொபைல் ஹியர்போன் போட்டுக்கொண்டிருந்தனர். எனக்கு பக்கத்து சீட்டில் இருந்தவர் கைகொள்ளாத அளவு மொபைல் போன் ஒன்றில் சினிமா பார்த்துக்கொண்டிருந்தார்.   .... இன்னும் நினைவு படுத்தி எழுத வேண்டும். ......

Comments

Popular posts from this blog

எங்கே விவசாயி?

உறைந்த இரத்தம்............ பிரிந்த உயிர்..............

Credit card மற்றும் debit card ஐ பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? அல்லது bank account இல் இருந்து எவ்வாறு பணம் திருடப்படுகிறது?